கொரோனா சிறப்புக் குழுவுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை
By: Monisha Sat, 26 Sept 2020 5:16:05 PM
சென்னை மண்டலத்திற்கு அமைக்கப்பட்ட கொரோனா சிறப்புக் குழுவுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை மண்டலத்திற்கு அமைக்கப்பட்ட கொரோனா சிறப்புக் குழுவுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கொரோனா தடுப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசித்த நிலையில் தற்போது சிறப்புக் குழுவுடன் சண்முகம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
Tags :
chennai |