சுதந்திரதின விழாவை ஒட்டி டில்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
By: Nagaraj Tue, 11 Aug 2020 6:58:08 PM
பாதுகாப்பு ஏற்பாடுகள் மும்முரம்... நாட்டின் 74ஆவது சுதந்திர தினம் வரும் 15ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், தலைநகர் டெல்லி முழுவதும் காவல்துறையினர் முழு உஷார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் அம்மோனியம் நைட்ரேட் அண்மையில் வெடித்து சிதறியதில் 150க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
சதிவேலை இதற்கு காரணமாக இருக்கலாம் என அந்நாட்டு அரசு சந்தேகம் எழுப்பிய
நிலையில், இந்த சம்பவம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு, டெல்லியில்
சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் அசம்பாவிதம் நேரிட்டு விடக்கூடாது
என்பதற்காக போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
சட்டம்-ஒழுங்கு
பணியை உறுதி செய்ய பல்வேறு பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதோடு,
அனைத்துப் பகுதிகளிலும் தீவிர வாகன சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, இந்தாண்டு எளிமையாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.