பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்பு படைவீரர், ஐந்து வயது குழந்தை பலி
By: Nagaraj Fri, 26 June 2020 8:02:37 PM
பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் ஒருவரும், ஐந்து வயது குழந்தையும் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பிஜ்பெஹாரா என்ற பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப் வீரர் ஒருவரும், 5 வயது குழந்தை ஒன்றும் உயிரிழந்தனர். இன்று (ஜூன் 26) பிற்பகல் 12:10 மணியளவில் சி.ஆர்.பி.எப்.,பின் 90-வது பட்டாலியன் படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் அனந்த்நாக் மாவட்டத்தில் பிஜ்பெஹாரா என்ற பகுதியில் சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் சி.ஆர்.பி.எப்.,
வீரர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் வீரர் ஒருவரும், 5
வயது குழந்தையும் படுகாயமடைந்தனர். அவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில்
சேர்த்தனர். அங்கு அவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது.
பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியைச் சுற்றி
வளைத்து தாக்குதல் நடத்தியவர்களை தேடி வருகின்றனர். ஜம்மு-காஷ்மீரின்
புல்வாமா மாவட்டத்தில் மற்றொரு சம்பவத்தில், வியாழன் மாலை
பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் மோதல்
ஏற்பட்டது. இதில் 2 பயங்கரவாதிகளை நம் வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.