Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீமானின் வந்தேறிகள் பேச்சு... பின்னடைவை அளிக்குமா வேட்பாளருக்கு!

சீமானின் வந்தேறிகள் பேச்சு... பின்னடைவை அளிக்குமா வேட்பாளருக்கு!

By: Nagaraj Sat, 18 Feb 2023 11:40:19 AM

சீமானின் வந்தேறிகள் பேச்சு... பின்னடைவை அளிக்குமா வேட்பாளருக்கு!

ஈரோடு: திருமகன் ஈவெரா மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதில் அதிமுகவும் - திமுக கூட்டணி சார்பில் காங்கிரசும் பலப்பரீட்சை நடத்தினாலும், ஆளுங்கட்சியாக உள்ள திமுகதான் செல்வாக்கை காட்டி வருகிறது.

நாம் தமிழர் கட்சியோ தனித்து போட்டியிட்டு வெற்றியை தீர்மானிக்கும் இடத்தில் இருக்கிறது. அக்கட்சியின் சார்பில் மேனகா என்பவர் போட்டியிடுகிறார். ஈரோடு கிழக்கு தொகுதியில் முதலியார் சமூக மக்கள் பெரும்பான்மையாக இருப்பதால் அச்சமூகத்தை சேர்ந்த வேட்பாளரை நிறுத்தினால் வெற்றி பெறாவிட்டாலும் அதிக வாக்கையாவது பெற்று 2வது 3வது இடத்துக்கு வரலாம் என்று கணக்குப் போட்டு சீமான் வேட்பாளரை நிறுத்தியுள்ளார்.

come,vote,no need,excitement,last time,aiadmk candidate ,வந்தேறிகள், ஓட்டு, தேவையில்லை, பரபரப்பு, கடந்த முறை, அதிமுக வேட்பாளர்

மற்ற போட்டியாளர்கள் வெவ்வேறு சமூகத்தை சார்ந்தவர் என்பதால் நாம் தமிழருக்கான தேர்தல் களம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் வாழலாம் ஆனால் தமிழர் மட்டும்தான் ஆள வேண்டும் என்று ஆவேசமாக சீமான் பேசுவது வழக்கம்.

ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது “வந்தேறிகள் ஓட்டு நமக்கு வேண்டாம்” என்று பேசியதால் அப்பகுதியில் உள்ள அந்த சமூகத்தைச் சார்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். “ஆதி தமிழ் குடிகளே நாங்கள் தான்” எங்களை போய் வந்தேறிகள் என்று எப்படி சொல்லலாம் என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

Tags :
|
|