Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • லாரியில் கடத்தி வரப்பட்ட 15 டன் அரிசி பறிமுதல்: தேர்தல் அதிகாரிகள் அதிரடி

லாரியில் கடத்தி வரப்பட்ட 15 டன் அரிசி பறிமுதல்: தேர்தல் அதிகாரிகள் அதிரடி

By: Nagaraj Mon, 03 Apr 2023 11:22:33 PM

லாரியில் கடத்தி வரப்பட்ட 15 டன் அரிசி பறிமுதல்: தேர்தல் அதிகாரிகள் அதிரடி

மங்களூரு: தேர்தல் அதிகாரிகள் அதிரடி... பந்த்வாலில் இருந்து பெங்களூருவுக்கு லாரியில் கடத்தி வரப்பட்ட 15 டன் அரிசியை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.கர்நாடக சட்டசபை தேர்தல் மே மாதம் 10-ந்தேதி நடக்க உள்ளது. இதன் காரணமாக பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா பரங்கிபேட் பகுதியில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை தேர்தல் அதிகாரிகள் நிறுத்தி சோதனை நடத்தினர். லாரியில் அரிசி மூட்டைகள் இருந்தன.

15 tons,bengaluru,​​lorry,pandwal,rice,seized, ,அரிசி, 15 டன், பண்ட்வால், பறிமுதல், பெங்களூரு, லாரி

இதுகுறித்து லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் அவரிடம் அரிசிக்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. மேலும், பண்ட்வாலில் இருந்து பெங்களூருக்கு அரிசியை கடத்தி வந்ததும் தெரியவந்தது. லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் பெங்களூரு நெலமங்களாவை சேர்ந்த சுனில் என்பது தெரியவந்தது.

மேலும், லாரியில் இருந்து 50 கிலோ எடையுள்ள 300 அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதாவது மொத்தம் 15 டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.6 லட்சம். மேலும் அரிசி கடத்தி வந்த லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பந்தல் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
|
|