கோழிப்பண்ணையில் பதுக்கப்பட்ட வெங்காய மூட்டைகள் பறிமுதல்
By: Nagaraj Tue, 10 Nov 2020 3:39:39 PM
கோழிப்பண்ணையில் பதுக்கப்பட்ட வெங்காய மூட்டைகள்... பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணையில் பதுக்கிய 4500 வெங்காய மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பகுதியில் இருக்கின்ற காலியான கோழி பண்ணை ஒன்றில் அதிக அளவிலான வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட கலெக்டர் வெங்கட பிரியாவுக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன்பிறகு ஆட்சியர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் அங்கு சென்று
சோதனையிட்டனர். அப்போது கோழிப்பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4500
க்கும் மேற்பட்ட பெரிய வெங்காய மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவற்றின்
மொத்த எடை 483 டன் ஆகும். இதனையடுத்து வெங்காய மூட்டைகளை பதுக்கி
வைத்திருந்த நபர்கள் பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதுமட்டுமன்றி
பறிமுதல் செய்யப்பட்ட வெங்காய மூட்டைகள் லாரி மூலமாக கூட்டுறவு
அங்காடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.