பதுளை மாவட்டத்தில் 1215 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தல்
By: Nagaraj Thu, 05 Nov 2020 3:51:40 PM
1215 குடும்பங்கள் தனிமை... பதுளை மாவட்டத்தில் 1215 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் தமயந்தி பரணகம தெரிவித்துள்ளார்.
பதுளை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் அனைத்து செயற்பாடுகளும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ள குறித்த குடும்பங்களுக்கு சுமார் 10,000 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியை வழங்கத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கையில் இதுவரையில் 222 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா: பொரளை பொலிஸ் நிலையத்தில் 41 பொலிஸ்
அலுவலர்களுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து,
பொரளை பொலிஸ் நிலையத்தில் மாத்திரம் இதுவரையில் 56 அதிகாரிகளுக்கு கொரோனா
தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை பதுளை மாவட்டத்தில்
மொத்தமாக இதுவரையில் 24 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளது. அத்துடன், அங்கு 2 ஆயிரத்து 193 பேர்
தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில்
இதுவரையில் 34 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருப்பதாக
மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர்.புஸ்பகுமார தெரிவித்துள்ளார். இதனையடுத்து,
அவர்களுடன் தொடர்புடைய சுமார் 1407 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.