Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செம்பரம்பாக்கம் ஏரி நிரம்புகிறது... நேரில் சென்று ஆய்வு செய்த அமைச்சர் துரைமுருகன்

செம்பரம்பாக்கம் ஏரி நிரம்புகிறது... நேரில் சென்று ஆய்வு செய்த அமைச்சர் துரைமுருகன்

By: Nagaraj Sun, 13 Nov 2022 3:35:54 PM

செம்பரம்பாக்கம் ஏரி நிரம்புகிறது... நேரில் சென்று ஆய்வு செய்த அமைச்சர் துரைமுருகன்

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருவதால், அமைச்சர் துரைமுருகன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்

சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஏரியில் இருந்து 1000 கன அடி உபரி நீர் திறந்து விடப்படுகிறது. ஏரிக்கு தற்போது வினாடிக்கு 3,675 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கடந்த 6 மணி நேரத்தில் 60 ஆயிரம் கோடி கன அடி நீர் உயர்ந்துள்ளது.

chenna,continuous,heavy-rains,source of drinking , கனமழை, செம்பரம்பாக்கம், நீர்வரத்து, ஆய்வு, அமைச்சர்

ஏரி வேகமாக நிரம்பி வருவதால் கூடுதல் உபரி நீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கால்வாய் அருகே உள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருவதால், அமைச்சர் துரைமுருகன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். ஏரிக்கு நீர் வரத்து, வெளியேற்றப்படும் நீரின் அளவு, ஏரியின் உறுதித்தன்மை ஆகியவற்றை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Tags :
|