Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செங்கோட்டை - மதுரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 10-ந் தேதி வரை ரத்து

செங்கோட்டை - மதுரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 10-ந் தேதி வரை ரத்து

By: vaithegi Mon, 05 Sept 2022 09:42:47 AM

செங்கோட்டை - மதுரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 10-ந் தேதி வரை ரத்து

மதுரை: ராஜபாளையம் - சங்கரன்கோவில் இடையே ரெயில் பாதை பலப்படுத்தும் பணிகள் நடைபெறுகிறது. எனவே மதுரையில் காலை 11.30 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை - செங்கோட்டை (06663) மற்றும் செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை - மதுரை (06664) முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 10-ந் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இத்தகவல் மதுரை ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து முன்னதாக பண்டிகை கால மக்கள் கூட்ட நெரிசலை சமாளிக்க மைசூரு- திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில் இயக்க தென்மேற்கு ரெயில்வே ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது.

special trains,red fort,madurai ,சிறப்பு ரெயில்கள் ,செங்கோட்டை ,மதுரை

அந்த வகையில் மைசூரு - திருவனந்தபுரம் சிறப்பு ரெயில் (06201) வருகிற 7-ந் தேதி மதியம் 12.15 மணிக்கு மைசூருவில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு நெல்லைக்கு வருகிறது. இதனையடுத்து இங்கிருந்து 4.35 மணிக்கு புறப்பட்டு காலை 7.30 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடைகிறது.மறுமார்க்கத்தில் இந்த சிறப்பு ரெயில் (06202) 8-ந் தேதி மதியம் 12.45 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு மாலை 4.15 மணிக்கு நெல்லைக்கு வருகிறது. 4.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 11.45 மணிக்கு மைசூரு சென்றடைகிறது.

மேலும் இந்த ரெயில்கள் மாண்டியா, கெங்கேரி, பெங்களூரு, கண்டோன்மென்ட், ஓசூர், தர்மபுரி, ஓமலூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, நெல்லை, நாகர்கோவில் டவுன் போன்ற ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :