Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாஜக இனி கோலாச்ச முடியாது... சொல்கிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர்

பாஜக இனி கோலாச்ச முடியாது... சொல்கிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர்

By: Nagaraj Sun, 15 Jan 2023 10:54:01 AM

பாஜக இனி கோலாச்ச முடியாது... சொல்கிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர்

திருவனந்தபுரம்: பா.ஜ.க. இனி கோலோச்ச முடியாது. பல மாநிலங்களில் அவர்கள் ஆட்சியை இழந்து வருகின்றனர். எனவே அடுத்து வரும் பொதுத் தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிப்பது அவ்வளவு சுலபமல்ல என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கூறியுள்ளார்.

திருவனந்தபுரம் எம்.பி.யும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சசி தரூர், காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோற்றவர். காங்கிரஸ் கட்சியினரே அவருக்கு எதிராக நின்றதால் அவரால் கட்சித் தலைவர் பதவியை வென்றெடுக்க முடியவில்லை.

ஆனாலும், சசி தரூரை சாதாரணமாக எண்ணிவிட முடியாது. ஐ.நா. சபையின் துணைப் பொதுச் செயலாளராக இருந்தவர். பலநாடுகளுக்கும் சென்று மாணவர்களுக்கு பாடம் எடுக்கிறார். 2009 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் திருவனந்தபுரம் தொகுதியில் களம் இறங்கிய அவர், தொடர்ந்து மூன்றாவது முறையாக எம்.பி.யாக இருக்கிறார்.

வருகிற 2024 ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 2019 ஆம் ஆண்டு தேர்தலில் கிடைத்த வெற்றி மீண்டும் கிடைக்காது என்று சொல்கிறார். கடந்த தேர்தலைவிட 50 இடங்களுக்கும் குறைவான இடங்களே பா.ஜ.க.வுக்கு கிடைக்கும் என்கிறார்.

திருவனந்தபுரத்தில் கேரள இலக்கிய விழாவில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் பா.ஜ.க. இனி கோலோச்ச முடியாது. பல மாநிலங்களில் அவர்கள் ஆட்சியை இழந்து வருகின்றனர். எனவே அடுத்து வரும் பொதுத் தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிப்பது அவ்வளவு சுலபமல்ல என்று கூறியுள்ளார்.

Tags :