Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செந்தில் பாலாஜி, நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி

செந்தில் பாலாஜி, நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி

By: vaithegi Mon, 09 Oct 2023 09:46:02 AM

செந்தில் பாலாஜி, நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி


சென்னை:அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி .. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 15-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதன் பின்னர் தற்போது செந்தில் பாலாஜியின் மீதான வழக்கு எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து இந்த வழக்கில் ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார்.

chest pain,hospital,senthil balaji ,நெஞ்சு வலி,மருத்துவமனை,செந்தில் பாலாஜி

ஆனால் அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இச்சூழலில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வருகிற அக்டோபர் 13ம் தேதி வரை நீடிக்கப்பட்டது.

இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நிலையில், செந்தில் பாலாஜி ரத்தக்கொதிப்பு காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

Tags :