Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழக புதிய சுகாதாரத்துறை செயலாளராக பதவியேற்றார் செந்தில்குமார் ஐஏஎஸ்

தமிழக புதிய சுகாதாரத்துறை செயலாளராக பதவியேற்றார் செந்தில்குமார் ஐஏஎஸ்

By: vaithegi Sun, 12 June 2022 7:56:17 PM

தமிழக புதிய சுகாதாரத்துறை செயலாளராக பதவியேற்றார் செந்தில்குமார் ஐஏஎஸ்

தமிழகத்தில் அரசு சார்பாக நிர்வாக காரணங்களுக்காக அவ்வப்போது IAS, IPS அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அதனையடுத்து, தற்போது தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத்றை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ராதாகிருஷ்ணன் அவர்கள் கடந்த வருடங்களில் பரவிய கொரோனா பெருந்தொற்றின் போது இரவு பகல் பாராது அயராது உழைத்து தொற்று பாதிப்பை குறைத்தார். அவ்வபோது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள பொது மக்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.கொரோனா தடுப்பு பணிகளில் இவரது பங்கு இன்றியமையாதது ஆகும்.

தற்போது அவர் கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத்றைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில் இவருக்கு பதிலாக தமிழக சுகாதாரத் துறையின் புதிய செயலாளராக செந்தில்குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வணிகவரித்துறை முதன்மைச் செயலாளராக தீரஜ்குமர் நியமிக்கப்பட்டுள்ளார். வருவய் நிர்வாக ஆணையராக அல்லது கூடுதல் தலைமைச் செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் ஊரக வளர்ச்சித் துறை இயக்குநராக தாரேஷ் அகமது உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தென்காசி, திருச்சி, ராமநாதபுரம், தருமபுரி ஆட்சியர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்


Tags :