Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிறப்பு கட்டண ரயில்களின் சேவை செப்டம்பர் மாதம் வரைக்கும் நீட்டிப்பு

சிறப்பு கட்டண ரயில்களின் சேவை செப்டம்பர் மாதம் வரைக்கும் நீட்டிப்பு

By: vaithegi Tue, 23 Aug 2022 1:08:37 PM

சிறப்பு கட்டண ரயில்களின் சேவை செப்டம்பர் மாதம் வரைக்கும் நீட்டிப்பு

சென்னை: ரயில்களில் பேருந்துகளை காட்டிலும் கட்டண செலவு குறைவு என்பதாலும், நீண்ட தூரம் பயணம் செய்யும் போது மிக சௌகரியமாக பயணம் செய்யலாம் என்பதாலும், கழிப்பறை வசதி இருக்கிறது என்பதாலும் பெரும்பாலான பயணிகள் ரயிலிலேயே பயணம் செய்ய விரும்புகின்றனர்.

மேலும், பயணிகளின் வசதிக்கு ஏற்ற வகையில் அவ்வப்போது பயணிகளுக்கு கூடுதல் சலுகைகளும் வழங்கப்பட்டு கொண்டு வருகிறது. முக்கிய பண்டிகை தினங்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகிறது.

மக்களின் போக்குவரத்துக்காக சில முக்கிய ரயில்களின் சேவை நீடிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. தற்போது என்னென்ன ரயில் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதற்கான முழு விளக்கத்தையும் பார்க்கலாம். முதலில், சென்னையில் இருந்து புறப்பட்டு தெலுங்கானா மாநிலத்திற்கு செல்லும் வாராந்திர சிறப்பு கட்டண ரயில்களின் சேவை செப்டம்பர் மாதம் வரைக்கும் நீடிக்கப்பட்டுள்ளது.

september,special fare train ,செப்டம்பர் ,சிறப்பு கட்டண ரயில்,

அதே போன்று, செகந்திராபாத்தில் இருந்து மதுரை இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு கட்டண ரயில்களின் சேவை செப்டம்பர் மாதம் வரைக்கும் நீடிக்கப்படவுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், செகந்திராபாதில் இருந்து ஆகஸ்ட் 29, செப்டம்பர் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் இரவு 9:25 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில் மறுநாள் இரவு 8.45 மணிக்கு மதுரையை சென்றடையும் எனவும்,

மேலும் மதுரையில் இருந்து ஆகஸ்ட் 31, செப்டம்பர் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் காலை 5.30 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 7:25 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சிறப்பு கட்டண ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளதாகவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags :