Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாகிஸ்தானில் கடுமையான பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; வாகன ஓட்டுனர்கள் திண்டாட்டம்

பாகிஸ்தானில் கடுமையான பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; வாகன ஓட்டுனர்கள் திண்டாட்டம்

By: Nagaraj Sun, 07 June 2020 11:05:28 AM

பாகிஸ்தானில் கடுமையான பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு; வாகன ஓட்டுனர்கள் திண்டாட்டம்

பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டால் பாகிஸ்தானில் நீண்ட தொலைவுக்கு பெட்ரோல் நிலையங்களில் வாகனங்கள் காத்து நிற்கும் நிலை உருவாகி உள்ளது.

பாகிஸ்தானின் பல நகரங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதனால் பெட்ரோல் நிலையங்களில் நீண்ட தொலைவுக்கு வாகனங்கள் காத்து நிற்கின்றன.

குவெட்டா, கராச்சி, பெசாவர், லாகூர் நகரங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் எரிபொருள் நிரப்புவதற்காக வாகனங்கள் நெடுந்தொலைவுக்குக் காத்து நிற்பதாகப் பாகிஸ்தானின் தி நியூஸ் தெரிவித்துள்ளது.

pakistan,petrol,diesel,shortage,long distance ,பாகிஸ்தான், பெட்ரோல், டீசல், தட்டுப்பாடு, நீண்ட தொலைவு

தட்டுப்பாடு காரணமாகப் பெட்ரோல், டீசல் விலை 3 மடங்கு உயர்ந்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் வாடிக்கையாளர்களின் கோபத்துக்கு ஆளாகாமல் இருக்க பெட்ரோல் நிலையங்களை உரிமையாளர்கள் மூடிவருவதாகவும் தெரிவித்துள்ளது. அதிக லாபம் ஈட்டுவதற்காக எரிபொருளை வைத்துக் கொண்டே செயற்கையான தட்டுப்பாட்டை எண்ணெய் நிறுவனங்கள் உருவாக்குவதாக அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.

Tags :
|
|