மாடுகளுக்கு உணவளித்த கிரிக்கெட் வீரர் ஷிகர்தவான்
By: Nagaraj Fri, 12 June 2020 6:21:22 PM
தன் மகனுடன் சேர்ந்து மாடுகளுக்கு உணவளித்து மகிழ்ந்துள்ளார் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்.
கொரோனாவால் ஊரடங்கு அறிவித்த பின்னர் மக்கள் மனதில் இருந்த மனிதநேயம் பலவாறும் வெளிப்பட்டது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் இன்னும் நிலைமை சீரடையவில்லை. மக்கள் தங்களால் இயன்றதை இயலாதோருக்கு அளித்து வருகின்றனர்.
ஊரடங்கு காலத்தில் சாலைகளில் சுற்றித்திரியும் விலங்குகள் உணவின்றி தவித்த போது பல்வேறு மனித நேய பண்பாளர்கள் அவற்றின் பசியை தீர்த்து வைத்தனர். பறவைகளுக்கும் உணவளித்தனர். தற்போதும் இதை பலரும் செய்து வருகின்றனர். அந்த நல்லுள்ளம் கொண்டவர்களில் தானும் ஒருவர் என நிரூபித்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் தவான்.
அந்தவகையில் இந்தியா கிரிக்கெட் அணி வீரரான ஷிகர் தவான், தனது மகன் ஜோராவருடன் இணைந்து பசியால் தவித்த மாடுகளுக்கு விலங்குகளுக்கு உணவளித்துள்ளார். இவர் தனது மகன் ஜோராவருடன் இணைந்து விலங்களுக்கு உணவளித்துள்ளார். இதை அவது மனைவி ஈஷா படமெடுத்துள்ளார்.
தனது மகனுக்கு வாழ்க்கையின் உண்மையான மதிப்புகளை கற்பிப்பது முக்கியம் என்றும், இந்த சோதனை காலங்களில் தேவைப்படுபவர்களுக்கு உதவுவதில் தங்கள் பங்கைச் செய்யுமாறு தனது ரசிகர்களை தவான் கேட்டுக்கொண்டார்.