Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிவசேனா-பாஜக கூட்டணி மீண்டும் அமைந்தாலும் தேர்தலில் சேர்ந்து போட்டியிடாது - சந்திரகாந்த் பாட்டீல்

சிவசேனா-பாஜக கூட்டணி மீண்டும் அமைந்தாலும் தேர்தலில் சேர்ந்து போட்டியிடாது - சந்திரகாந்த் பாட்டீல்

By: Karunakaran Wed, 29 July 2020 3:51:47 PM

சிவசேனா-பாஜக கூட்டணி மீண்டும் அமைந்தாலும் தேர்தலில் சேர்ந்து போட்டியிடாது - சந்திரகாந்த் பாட்டீல்

மகாராஷ்டிரா மாநில பாரதீய ஜனதா செயற்குழு கூட்டம் நடைபெற்றபோது, வீடியோ கான்பரன்சிங் மூலம் மாநில நிர்வாகிகளிடம் கட்சி தலைவர் ஜே.பி. நட்டா பேசினார். அப்போது பேசிய ஜே.பி. நட்டா, பாரதீய ஜனதா தனித்து ஆட்சியை கைப்பற்றும் அளவுக்கு கட்சியை வளர்க்குமாறும், கட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவை பலப்படுத்துமாறும் கூறினார்.

தற்போது சிவசேனா- பா.ஜனதா கூட்டணி மீண்டும் அமைந்தாலும் இனிமேல் 2 கட்சிகளும் தேர்தலில் சேர்ந்து போட்டியிடாது என பாரதீய ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியுள்ளார். இனிமேல் இரு கட்சிகள் கூட்டணி அமைந்தாலும் நாங்கள் எந்த தேர்தலிலும் சேர்ந்து போட்டியிடமாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.

chandrakanth patil,shiv sena,bjp,election ,சந்திரகாந்த் பாட்டீல், சிவசேனா, பாஜக, தேர்தல்

பா.ஜனதா நாடாளுமன்ற குழு மாநிலத்தின் நலன் கருதி சிவசேனாவுடன் கூட்டணி அமைக்குமாறு கூறினால்,நாங்கள் எந்த தேர்தலிலும் சேர்ந்து போட்டியிடமாட்டோம். கடந்த 5 ஆண்டுகளாக சிவசேனாவுடன் கூட்டணியில் இருந்தோம். 2019 தேர்தலுக்கு பிறகு அதிக மந்திரி பதவிகளை அவர்களுக்கு வழங்க தயாராக இருந்ததாக சந்திரகாந்த் பாட்டீல் கூறியுள்ளார்.

மேலும் அவர், பாரதீய ஜனதா தேசிய கட்சி, முதல்-மந்திரி பதவியை பிராந்திய கட்சிகளுடன் பகிர்ந்து கொள்ள முடியாது. இங்கு இதை செய்தால் இதே கொள்கையை மற்ற மாநிலங்களிலும் பின்பற்றிய வேண்டியது ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.

Tags :
|