Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிவசேனா கூட்டணி அரசாங்கம் நீண்ட காலம் நீடிக்காது - தேவேந்திர பட்னாவிஸ்

சிவசேனா கூட்டணி அரசாங்கம் நீண்ட காலம் நீடிக்காது - தேவேந்திர பட்னாவிஸ்

By: Karunakaran Sat, 01 Aug 2020 2:56:38 PM

சிவசேனா கூட்டணி அரசாங்கம் நீண்ட காலம் நீடிக்காது - தேவேந்திர பட்னாவிஸ்

மகாராஷ்டிராவில் கொள்கையில் முரண்பட்ட சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி அமைந்துள்ளன. மகாராஷ்டிர முதல்வராக சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே பதவி வகிக்கிறார். இந்த கூட்டணியில் அவ்வபோது உரசல்கள் ஏற்பட்டு வருகின்றன. கொரோனா பிரச்சினையில் முடிவுகளை எடுப்பதில் காங்கிரஸ் புறக்கணிக்கப்படுவதாக ஏற்பட்டுள்ளன.

காங்கிரஸ் கட்சியின் மந்திரிகள் பாலசாகேப் தோரட், அசோக்சவான் ஆகியோர் முதல்மந்திரி உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசியதை தொடர்ந்து இந்த உரசல்கள் முடிவுக்கு வந்தது. அதன்பின், மந்திரி பாலசாகேப் தோரட், இந்த கூட்டணி ஒரு குடும்பம் போன்றது, அதில் அங்கம் வகிப்பவர்கள் சகோதரர்களை போன்றவர்கள் என்று தெரிவித்தார்.

devendra patnawis,bjp,shiv sena,coalition government ,தேவேந்திர பட்னாவிஸ், பாஜக, சிவசேனா, கூட்டணி அரசு

இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் மும்பையில் மராத்தி செய்தி சேனல் நடத்திய நிகழ்ச்சியில் பேசியபோது, நாங்கள் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க போவதில்லை. அதில் எங்களுக்கு ஆர்வமும் இல்லை. கருத்தியல் ரீதியாக வேறுபட்ட கட்சிகளின் அரசாங்கம் நாட்டில் ஒருபோதும் நிலையாக இருந்தது இல்லை. மகா விகாஷ் அகாடி போன்ற ஆட்சி தப்பிக்க காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது. அவர்களிடையே பெரும் முரண்பாடு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், பாலசாகேப் எதையும் சொல்லட்டும். ஆனால் அது ஒரு குடும்பம் அல்ல. அவர்களுடையது ஒரு பிளவுபட்ட குடும்பம். தவறான வார்த்தையே பயன்படுத்துவதற்கு என்னை மன்னிக்க வேண்டும். இந்த கூட்டணி ஒரு லிவ் இன் ரிலேஷன்ஷிப். இந்த அரசாங்கம் நீண்ட காலம் நீடிக்காது. அது தானாகவே கவிழும் என்று கூறியுள்ளார்.

Tags :
|