Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கென்யாவில் சவக்கிடங்கில் ஊழியர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

கென்யாவில் சவக்கிடங்கில் ஊழியர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

By: Nagaraj Sat, 28 Nov 2020 8:50:00 PM

கென்யாவில் சவக்கிடங்கில் ஊழியர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

சவக்கிடங்கில் ஏற்பட்ட அதிர்ச்சி... சவக்கிடங்கு ஊழியர்கள் சடலம் ஒன்றின் காலை கீறியபோது அலறல் சத்தம் கேட்டதால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கென்யாவில் வசித்து வருபவர் பீட்டர் கிஜென் (32) என்பவர் வீட்டில் திடீரென நிலைகுலைந்து விழுந்ததால் உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து பீட்டரின் உடல் சவக்கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு உடலை பதப்படுத்துவதற்காக ஊழியர்கள் அவருடைய காலில் கத்தியால் கீறி உள்ளனர். அப்போது அலறிக்கொண்டு பீட்டர் எழுந்ததால், அதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்களும் அலறியுள்ளனர்.

hospital,corpse,trauma,kenya,case ,மருத்துவமனை, சடலம், அதிர்ச்சி, கென்யா, வழக்கு

இதையடுத்து அவரை மீண்டும் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி அங்கு முதலுதவி அளித்துள்ளனர். உண்மையிலேயே பீட்டர் இறந்து விட்டாரா? இல்லையா? என்பதை பார்க்காமல் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை ஊழியர்கள் கூறிவிட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் பீட்டர் தான் உயிர் பிழைத்தால் கடவுளுக்கு தொண்டு செய்வதாக வேண்டியுள்ளார். இந்நிலையில் அவரது உறவினர்கள் இதற்கு காரணமான மருத்துவமனை மீது வழக்கு தொடர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
|
|
|