Advertisement

ஏடிஎம்-ல் மதிப்பிழந்த நோட்டுக்கள் வந்ததால் அதிர்ச்சி

By: Nagaraj Fri, 13 Nov 2020 7:56:59 PM

ஏடிஎம்-ல் மதிப்பிழந்த நோட்டுக்கள் வந்ததால் அதிர்ச்சி

மதிப்பிழந்த நோட்டுகள் வந்ததால் அதிர்ச்சி... திருவண்ணாமலை ஏடிஎம் மையத்தில் இருந்து செல்லாத பழைய ரூபாய் நோட்டுகள் வந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கல்பனா என்ற பெண் பேருந்து நிலையம் அருகே உள்ள ஏ.டி.எம். மையத்தில் 3500 ரூபாய் பணம் எடுத்துள்ளார். பணத்துடன் சேர்ந்த இருந்த பழைய 500 ரூபாய் நோட்டை அவர் சரியாக கவனிக்கவில்லை.

இரண்டு நாட்கள் கழித்து கடைக்கு அந்த பணத்தை எடுத்துச் செல்லும் போது அதில் ஒரு பழைய 500 ரூபாய் நோட்டு இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் வங்கிக்கு சென்று கேட்டுள்ளார்.

shock,thiruvannamalai,atm center ,அதிர்ச்சி, திருவண்ணாமலை, ஏடிஎம் மையம்

பணத்தை வாங்கிப்பார்த்த வங்கி ஊழியர்கள், அது தங்கள் ஏடிஎம்மில் இருந்து வந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறினர். கல்பனா வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், ஏடிஎம் சென்டரில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். ஆனால், அவர் செல்லாத 500 நோட்டினை அந்த ஏடிஎம்மில் இருந்துதான் எடுத்தார் என்பது தெளிவாக தெரியவில்லை.

மேலும் பணம் எடுத்து மூன்று நாட்களுக்கு பின்னர் வந்து கேட்டதால் வங்கி அந்த பணத்தை வாங்கிக்கொள்ள மறுத்தது. இந்த சம்பவம் திருவண்ணாமலை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
|