Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனாவில் புதிய பாக்டீரியா தொற்று வேகமாக பரவி வருவதால் கடும் அதிர்ச்சி

சீனாவில் புதிய பாக்டீரியா தொற்று வேகமாக பரவி வருவதால் கடும் அதிர்ச்சி

By: Karunakaran Sun, 20 Sept 2020 7:20:35 PM

சீனாவில் புதிய பாக்டீரியா தொற்று வேகமாக பரவி வருவதால் கடும் அதிர்ச்சி

சீனாவின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும்பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் சீனாவில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், சீனா முழுவதும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். தற்போது, சீனாவில் புதிய பாக்டீரியா தொற்று வேகமாக பரவி வருகிறது.

கொரோனா வைரசுக்கு மருந்து கண்டு பிடிக்கப்படாத நிலையில் தற்போது மற்றொரு வைரஸ் பரவி வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கன்சு மாகாணத்தின் தலைநகரான லான்ஷோ சுகாதார ஆணையத்தின் தகவலின்படி, புதிய வைரஸ் தொற்றால் சீனாவில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது ‘ப்ரூசெல்லா’ என்ற பாக்டீரியாவை கொண்டு இருக்கும் கால்நடைகளுடனான தொடர்பு காரணமாக ஏற்படுவதாக கூறப்படுகிறது.

new bacterial infection,china,corona virus,infertility ,புதிய பாக்டீரியா தொற்று, சீனா, கொரோனா வைரஸ், மலட்டுத்தன்மை

மால்டா காய்ச்சல் என்று அழைக்கப்படும் இந்த நோய் தலைவலி, தசை வலி, காய்ச்சல் மற்றும் சோர்வு ஆகியவற்றை ஏற்படுத்தும். சிறிது காலம் கழித்து அந்த அறிகுறிகள் குறைந்துவிடும். என்றாலும், சில அறிகுறிகள் நீண்ட நாட்கள் இருக்கக்கூடியதாக மாறக்கூடும். இந்த வைரஸ் ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என்றும் வாழ்நாள் முழுக்க பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

இந்த வைரஸ் மனிதர்களிடையே பரவுவது மிகவும் அரிதானது என்றும் அசுத்தமான உணவை சாப்பிடுவதன் மூலமாகவோ அல்லது பாக்டீரியாவை சுவாசிப்பதன் மூலமாகவோ தொற்று பரவும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு மத்தியில் லான்ஜோ உயிரியல் மருந்து தொழிற்சாலையில் விலங்குகளின் பயன்பாட்டுக்கு ப்ரூசெல்லா தடுப்பூசிகள் தயாரிக்கும் போது ஏற்பட்ட கசிவால் இந்த வைரஸ் பரவல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags :
|