சூடான் டர்பூர் நகரில் விவசாயப்பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு
By: Nagaraj Sun, 26 July 2020 11:37:55 AM
சூடான் டர்பூர் நகரில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது இனந்தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 20 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.
தற்போது போர் சற்று குறைந்ததையடுத்து இடம்பெயர்ந்தவர்கள் தங்கள் சொந்த பகுதிகளுக்கு திரும்பியவாறு உள்ளனர். ஆனால் ஏற்கனவே கைவிடப்பட்ட பகுதிகளை வேறு சிலர் கைப்பற்றி விவசாயம் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த விவசாய நிலத்திற்குள் துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் ஒருவர் அங்கு
விவாசய பணிகளை செய்துகொண்டிருந்தவர்களை குறிவைத்து திடீர்
துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினார்.
இந்த தாக்குதலில்
விவசாயப்பணியில் ஈடுபட்டிருந்த 20 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
உள்ளது. மேலும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.