கலிபோர்னியாவில் உள்ள சீக்கியர்களின் வழிபாட்டு தலத்தில் துப்பாக்கிச்சூடு
By: Nagaraj Mon, 27 Mar 2023 8:16:53 PM
கலிபோர்னியா: துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் காயம்... அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சீக்கியர்களின் வழிபாட்டுத் தலத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இருவர் காயமடைந்தனர்.
கலிபோர்னியாவில் உள்ள சேக்ரமென்டோவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாக்ரமென்டோ கவுண்டி ஷெரிப் கூறுகையில், “இரண்டு நபர்களுக்கு இடையே ஏற்பட்ட பகையின் விளைவாக இந்த சம்பவம் நிகழ்ந்தது. துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளான இருவரும் ஆபத்தான நிலையில் உள்ளனர், எனவே, வெறுப்புக் குற்றங்கள் எதுவும் இல்லை என்பது உறுதியானது,” என்றார்.
புலம்பெயர்ந்த பஞ்சாபிகள் சிலர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை பிரித்து காலிஸ்தான் என்ற தனி நாட்டை உருவாக்க முயற்சிக்கின்றனர். அமிர்தபால் சிங் இந்தியாவில் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார். சீக்கிய மதகுருவான அவர் மீதான வழக்குகள் தொடர்பாக சமீபத்தில் போலீசார் அவரை கைது செய்ய முயன்றபோது அவர் தப்பி ஓடிவிட்டார். அவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அம்ரித்பால் சிங் மீதான நடவடிக்கையைத் தொடர்ந்து, வெளிநாட்டில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
ஆனால், அமெரிக்காவில் சீக்கிய குருத்வாராவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் பின்னணியில், இது வெறுப்பு குற்றமல்ல, தனிப்பட்ட பிரச்னை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.