Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி காலி முகத்திடலில் கையெழுத்து போராட்டம்

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி காலி முகத்திடலில் கையெழுத்து போராட்டம்

By: Nagaraj Tue, 10 Jan 2023 09:14:24 AM

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி காலி முகத்திடலில் கையெழுத்து போராட்டம்

கொழும்பு: கையெழுத்து போராட்டம்... பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு இலங்கை சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே ஆகியோரை விடுவிக்க கோரி கையெழுத்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கொழும்பு - காலி முகத்திடலில் இந்தக் கோரிக்கை மனுவில் கையெழுத்து திரட்டும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், சிறிலங்கா காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கையெழுத்து திரட்டும் போராட்டத்திற்கு மக்கள் பெருமளவில் ஆதரவு வழங்கியுள்ளனர்.

demonstrators,liberation,sign,police,accumulation ,ஆர்ப்பாட்டக்காரர்கள், விடுதலை, கையெழுத்து, போலீசார், குவிப்பு

இலங்கையில் கடந்த மே, ஜூன் மற்றும் ஜூலை ஆகிய மாதங்களின் ஒன்பதாம் திகதிகளில் நடைபெற்ற போராட்டங்களின் போது பாரிய அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டிருந்ததாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த அரசியல் மாற்றங்களுக்கு காரணமான ஆர்ப்பாட்டங்களின் போது ஏற்பட்ட வன்முறைகளால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் முகமாக ஒவ்வொரு மாதமும் ஒன்பதாம் திகதி காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடுவதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்தப் போராட்டங்களின் போது பல லட்சக்கணக்கான மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டனர். கைதுசெய்வதென்றால், குறித்த ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்ட அனைவரையும் கைதுசெய்யவேண்டும். இல்லையென்றால் தனியாக கைதுசெய்யப்பட்டிருக்கும் வசந்த முதலிகேவை விடுதலை செய்யவேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags :
|
|