Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருமண நாளை ஐ.சி.யூவில் கேக் வெட்டி கொண்டாடிய பாடகர் எஸ்.பி.பி.

திருமண நாளை ஐ.சி.யூவில் கேக் வெட்டி கொண்டாடிய பாடகர் எஸ்.பி.பி.

By: Nagaraj Sun, 06 Sept 2020 1:49:13 PM

திருமண நாளை ஐ.சி.யூவில் கேக் வெட்டி கொண்டாடிய பாடகர் எஸ்.பி.பி.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியம், தனது மனைவியுடன் கேக் வெட்டி திருமணநாளை கொண்டாடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

hospital,s.p. balasubramaniam,cake,cut ,மருத்துவமனை, எஸ்.பி. பாலசுப்பிரமணியம், கேக், வெட்டினார்

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் எஸ்.பி.பி மகன் சரண் வெளியிட்ட வீடியோவில்,' அப்பாவின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுவருகிறது. கடவுள் அருளாலும், உங்கள் அனைவரது பிரார்த்தனையாலும், வரும் திங்கட் கிழமைக்குள் நல்ல செய்தி வரும் என நம்புகிறேன்' என, தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் எஸ்.பி., பாலசுப்ரமணியம் - சாவித்திரிக்கு நேற்று திருமண நாள். இதையொட்டி, ஐ.சி.யூ.,வில் கேக் வெட்டி கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இதற்காக, பிரத்யேகமாக கேக் வாங்கி வரப்பட்டு, ஐ.சி.யூ.,வில் வைக்கப்பட்டது. மருத்துவர்கள் உதவியுடன் எஸ்.பி.பி., - சாவித்திரி இருவரும்,கேக் வெட்டி மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.

இந்நெகிழ்ச்சியான நிகழ்வு, மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், எஸ்.பி.பி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
|