Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி துணை மின் நிலையத்தில் நாளை (ஜூலை 13) மின்தடை

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி துணை மின் நிலையத்தில் நாளை (ஜூலை 13) மின்தடை

By: vaithegi Tue, 12 July 2022 12:20:39 PM

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி துணை மின் நிலையத்தில் நாளை (ஜூலை 13) மின்தடை

சிவகங்கை : தமிழகத்தில் நாளை (ஜூலை 12) சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி துணை மின் நிலையத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்களை மின்சார வாரியம் தெரிவித்துள்ளது

அதனால் மதகுபட்டி, ஒக்கூர், கீழமங்கலம், காடனேரி, அம்மன்பட்டி, நகரம்பட்டி, காளையார்மங்கலம், கருங்காப்பட்டி, தச்சம்பட்டி, கருங்காலக்குடி, அண்ணா நகர், பர்மா காலனி, நாலுகோட்டை, ராமலிங்கபுரம், வீழநேரி ஆகிய கிராமங்களிலும், அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும், மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று சிவகங்கை மின்பகிர்மான செயற்பொறியாளர் ஏ.கே முருகையன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அதே மாதிரி இன்று (ஜூலை 12) காரைக்குடி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காரைக்குடி நகர் பகுதிகள், பேயன்பட்டி வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள், செக்காலைக்கோட்டை, பாரி நகர், கல்லூரி சாலை, செக்காலை சாலை,

மேலும் புதிய பேருந்து நிலையம், கல்லுக்கட்டி, பழைய பேருந்து நிலையம், கோவிலூர் சாலை, செஞ்சை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்விநியோகம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நிறுத்தப்படும் என்று காரைக்குடி மின் கோட்ட செயற்பொறியாளர் பி. ஜான்சன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags :