ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஆறு மாதங்கள் நிறைவு
By: Nagaraj Fri, 25 Sept 2020 8:15:12 PM
ஆறுமாதங்கள் நிறைவு...கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஆறு மாதங்கள் நிறைவடைகின்றன.
சீனாவில் கடந்தாண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகெங்கும் பரவத் துவங்கியது. கடந்த, மார்ச், 24ம் தேதி, 'டிவி'யில் உரையாற்றிய, பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா பரவலை தடுப்பதற்காக, 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவித்தார்.
அப்போது, 500க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு இருந்தது. அதில், 12 பேர் உயிரிழந்தனர். ஊரடங்கு அமலுக்கு வந்து, ஆறு மாதங்கள் நிறைவடையும் நிலையில், 57.32 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் 91 ஆயிரத்து, 149 பேர் உயிரிழந்துள்ளனர்.
Tags :
corona |
curfew |