Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீதிபதி மற்றும் அவரது மகன் கொலையில் பெண் உட்பட 6 பேர் கைது

நீதிபதி மற்றும் அவரது மகன் கொலையில் பெண் உட்பட 6 பேர் கைது

By: Nagaraj Thu, 30 July 2020 9:22:37 PM

நீதிபதி மற்றும் அவரது மகன் கொலையில் பெண் உட்பட 6 பேர் கைது

நீதிபதி, மகன் கொலை... மத்திய பிரதேசத்தில் விஷம் கலந்த சப்பாத்தியை சாப்பிட்ட நீதிபதியும், அவரது மகனும் உயிரிழந்தது தொடர்பாக, ஒரு பெண் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிந்த்வாரா மாவட்ட நீதிபதி பேதுல் மகேந்திர திரிபாதியும், அவரது இரு மகன்களும் கடந்த 20ம் தேதி இரவு சாப்பாத்தி சாப்பிட்ட நிலையில், வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

sandhya singh,accomplice,vedic scholar,6,arrested ,சந்தியா சிங், உடந்தை, வேத பண்டிதர், 6 பேர்,  கைது

உடல்நிலை மோசமாகி 25ம் தேதி நீதிபதியின் மூத்த மகனும், தொடர்ந்து நீதிபதியும் உயிரிழந்தனர். அவர்கள் சாப்பிட்ட சப்பாத்தியில் விஷம் கலந்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் சந்தியா சிங் என்ற பெண், விஷம் கலந்த சப்பாத்தி மாவை, பூஜையில் வைத்த மாவு எனக் கூறி நீதிபதியிடம் வழங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து சந்தியா சிங், அவருக்கு உடந்தையாக இருந்த வேத பண்டிதர் உட்பட 6 பேரை கைது செய்த போலீசார், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags :
|