சென்னை ஐகோர்ட்டில், நீதிபதியாக இருந்த எஸ்.கண்ணம்மாள் ஓய்வு பெற்றார்
By: vaithegi Wed, 20 July 2022 09:21:00 AM
சென்னை: சென்னை ஐகோர்ட்டில், நீதிபதியாக இருந்த எஸ்.கண்ணம்மாள் நேற்று ஓய்வு பெற்றார். 1991-ம் ஆண்டு நடந்த நீதித்துறை தேர்வில் வெற்றிப் பெற்று சார்பு நீதிபதியாக கிருஷ்ணகிரி, நெல்லை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றினார்.
மேலும் பதவி உயர்வு பெற்ற மாவட்ட முதன்மை நீதிபதியாக பதவி வகித்த இவர், கடந்த 2020-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக பொறுப்பு ஏற்றார்.
இதை அடுத்து ஐகோர்ட்டில், தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி தலைமையில் அவருக்கு பிரிவுபசார விழா நடத்தப்பட்டது. நீதிபதி கண்ணம்மாள் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, ஐகோர்ட்டின் நீதிபதிகளின் எண்ணிக்கை 57 ஆக குறைந்துள்ளது. காலி பணியிடங்கள் 18 ஆக உயர்ந்துள்ளது.
Tags :