Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பேட்டரி துறையில் திறமையானவர்களுக்கு பற்றாக்குறை: ஜப்பானின் புதிய திட்டம்

பேட்டரி துறையில் திறமையானவர்களுக்கு பற்றாக்குறை: ஜப்பானின் புதிய திட்டம்

By: Nagaraj Sat, 01 July 2023 8:38:01 PM

பேட்டரி துறையில் திறமையானவர்களுக்கு பற்றாக்குறை: ஜப்பானின் புதிய திட்டம்

ஜப்பான்: பேட்டரி துறையில் திறமையானவர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் புது திட்டத்தை ஜப்பான் வகுத்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

உலகின் பெரும்பாலான நாடுகள் சீனாவிடம் இருந்து உதிரி பாகங்கள் உள்ளிட்டவைகளை தயாரித்து வாங்குவதால் தங்களுடைய நாட்டில் சொந்தமாக அதை தயாரிக்கும் திறன் குறைந்து விட்டதாக எண்ணுகின்றன.

தற்போது மின்சார வாகனங்களுக்கு உலகெங்கும் ஒரு சந்தை உருவாகி அதற்கான தேவை பெருகி வருகிறது. Powered By இவற்றின் உற்பத்திக்கு மிக அவசியமானவையாக கருதப்படுவது பேட்டரி தொடர்பான பாகங்கள். இதை தாங்களாகவே தயாரிக்க இந்த நாடுகள் நினைக்கும்போது, அதற்கான தொழில்முறை வல்லுனர்கள், என்ஜினீயர்கள் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு ஜப்பானும் விதிவிலக்கல்ல.

schools,vocational schools,to be expanded,japan,new plan ,பள்ளிகள், தொழிற்கல்வி பள்ளிகள், விரிவுப்படுத்தப்படும், ஜப்பான், புதிய திட்டம்

இந்நிலையை சமாளிக்க அந்நாடு ஒரு திட்டம் தீட்டியுள்ளது. 2030-ம் ஆண்டிற்குள் 30 ஆயிரம் பேட்டரி தொடர்பான தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிப்பதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் இந்த துறையின் தொழிலாளர் சக்தி தற்போதைய 10 ஆயிரத்தில் இருந்து நான்கு மடங்காக உயரும் என எதிர்பார்க்கிறது.

பல்லாயிரக்கணக்கான பேட்டரி பொறியாளர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களைக் கண்டுபிடித்து பயிற்சியளிக்க, ஜப்பான், அந்நாட்டின் உயர்நிலை பள்ளி மாணவர்களையும், கல்லூரி மாணவர்களையும், மற்றும் தொழிற்கல்வி மாணவர்களையும், நாடு முழுவதும் கண்டறிந்து பல ஆண்டு தீவிரப் பயிற்சியளிக்க திட்டமிட்டிருக்கிறது.

இதற்காக மிகப்பெரிய அளவில் ஆட்சேர்ப்பு செய்யவும் முயற்சிகள் செய்யப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தகவல்களின்படி, 40 மாணவர்களைக் கொண்ட முதல் குழு, வரும் டிசம்பரில் ஜப்பானின் ஒசாகா மாகாணத்தில் உள்ள ஒரு தொழிற்கல்வி பள்ளியில், பேட்டரி தொழில்நுட்பத்தை கற்கத் தொடங்கும். பின்னர், இத்திட்டம் உயர்நிலைப் பள்ளிகள், தொழிற்கல்வி பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என தெரிகிறது.

Tags :
|