சூட்கேஸ் மீது தூங்கும் மகன்... மெதுவாக இழுத்துச் செல்லும் தாய்
By: Nagaraj Thu, 14 May 2020 8:32:38 PM
தனது சொந்த ஊருக்கு நடந்து செல்லும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களில், மகன் சூட்கேஸிலேயே தூங்க, அதை அவரது தாய் இழுத்து செல்லும் வீடியோ வெளியாகி மனதை கலங்க வைக்கிறது.
நாடு முழுவதும் ஊரடங்கு அமலாகி உள்ளது. மே 17ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு 4வது முறையாக நீட்டிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பலர், தங்கள் சொந்த ஊருக்கு நடந்தும், சைக்கிளிலும் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், பஞ்சாபிலிருந்து உ.பி., மாநிலம் ஜான்சி நோக்கி 800 நடக்கும் ஒரு குழுவில், நடக்க முடயாத மகன் சூட்கேஸில் படுத்து தூங்க, அவரது தாய் சூட்கேசை இழுத்து செல்கிறார். அவரிடம் வீடியோ எடுத்தவர், மாநில அரசு ஏற்பாடு செய்த பஸ்சில் செல்லவில்லையா என கேள்வி கேட்க, பதிலளிக்காமல் தொடர்ந்து அவர் பயணம் மேற்கொள்கிறார்.
இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் அவர் வெளியிட அது வைரலானது.