Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தங்கத்தை பவுடர் வடிவில் மாற்றி அட்டைப்பெட்டியில் தூவி கடத்தல்

தங்கத்தை பவுடர் வடிவில் மாற்றி அட்டைப்பெட்டியில் தூவி கடத்தல்

By: Nagaraj Sat, 12 Aug 2023 5:20:16 PM

தங்கத்தை பவுடர் வடிவில் மாற்றி அட்டைப்பெட்டியில் தூவி கடத்தல்

திருச்சி: நூதன முறையில் கடத்தல்... திருச்சி விமான நிலையத்தில் தங்கத்தை பவுடர் வடிவில் அட்டை பெட்டியில் தூவி கடத்தி வந்த ரூ.10 லட்சத்து 48 ஆயிரத்து 80 மதிப்புள்ள 176 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் விமானங்களில் வரும் பயணிகள் தங்கம் மற்றும் வெளிநாட்டு பணத்தினை கடத்தி வருவது தொடர்கதையாகி இருந்து வருகிறது அதனை அவ்வப்போது சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டு பறிமுதல் செய்து வருகின்றனர்.

trichy,passenger,investigation,customs officers,seizure ,திருச்சி, பயணி, விசாரணை, சுங்கத்துறை அதிகாரிகள், பறிமுதல்

இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து இன்று காலை துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்போது சந்தேகத்திற்கு இடமான பயணி ஒருவர் தங்கத்தை பவுடர் வடிவில் அட்டைப்பெட்டியில் தூவி மறைத்து கடத்தி எடுத்து வந்தது தெரியவந்தது.

இந்த தங்கத்தின் மதிப்பு ரூ.10 லட்சத்து 48 ஆயிரத்து 80 என்பது தெரிய வந்தது. கடத்தி வரப்பட்ட தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த பயணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
|