Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மழை வெள்ளத்தால் வீடுகளில் புகுந்த பாம்பு; மக்கள் அச்சம்

மழை வெள்ளத்தால் வீடுகளில் புகுந்த பாம்பு; மக்கள் அச்சம்

By: Monisha Fri, 27 Nov 2020 3:06:17 PM

மழை வெள்ளத்தால் வீடுகளில் புகுந்த பாம்பு; மக்கள் அச்சம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நிவர் புயல் காரணமாக ஏற்பட்ட மழையால் குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது. இந்த வெள்ளத்தினால் வீடுகளில் பாம்புகள் புகுந்தன. இதனாக மக்கள் அச்சம் அடைந்தனர்.

பாம்புகள் புகுந்தால் உடனடியாக கிண்டி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் கிண்டி வனத்துறைக்கு வீடுகளில் பாம்பு புகுந்துவிட்டதாக 123 அழைப்புகள் வந்தன.

storm,rain,house,snake,fear ,புயல்,மழை,வீடு,பாம்பு,அச்சம்

சென்னையில் தாம்பரம், மேடவாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூர், முடிச்சூர் போன்ற பகுதிகளில் இருந்து வனத்துறைக்கு பல அழைப்புகள் வந்தன.

இதையடுத்து கிண்டி வனத்துறையில் இருந்த பாம்பு பிடிக்கும் நபர்கள் சென்று பாம்புகளை லாவகமாக பிடித்தனர். இதில் நல்ல பாம்புகள், சாரை பாம்புகள், தண்ணீர் பாம்புகள், வில்லிகோல் வரையன் பாம்புகள், பச்சை பாம்புகள் உள்ளிட்ட 100 பாம்புகள் பிடிபட்டன. பிடிக்கபட்ட பாம்புகள் காப்பு காடுகளில் விடப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
|
|
|
|