இந்தியாவில் இதுவரை 219.87 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது
By: Nagaraj Wed, 23 Nov 2022 6:33:08 PM
புதுடில்லி: இந்தியாவில் மட்டும் இதுவரை 219.87 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இத்தகவலை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் வெயிட்ட அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 360 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,46,70,075 ஆக அதிகரித்து உள்ளது.
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 6,046 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,41,33,433 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
5,30,596 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் மட்டும் இதுவரை 219.87 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த தகவலை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.