- வீடு›
- செய்திகள்›
- வைரஸ் காய்ச்சல் .. தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
வைரஸ் காய்ச்சல் .. தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
By: vaithegi Sun, 18 Sept 2022 11:54:34 AM
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் பரவி கொண்டு வருகிறது. எனவே இதனால் புதுச்சேரி அரசு ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 25 ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்தது.
இதனை அடுத்து இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள், இவ்வாறான காய்ச்சல் மழைக் காலத்தில் பரவக் கூடியது தான் என்றும், இது குறித்து பயம் கொள்ள தேவையில்லை என்றும் விளக்கினார்கள்.
இதையடுத்தது இந்த நிலையில் தற்போது தமிழகத்திலும் இதுபோன்ற விடுமுறை அறிவிக்கவேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது. ஏற்கனவே விடுமுறை அறிவிக்க தமிழ்நாடு அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் உள்பட பலர் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இது குறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவித்தாவது, “காய்ச்சல் அதிகரிப்பால் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பது சிறந்தது” என்று தங்கள் கருத்துக்களை தெரிவித்து உள்ளனர்”.