ஹற்றன்-நோட்டன் பிரிட்ஜ் பிரதான வீதியில் மழையால் மண் சரிவு
By: Nagaraj Sat, 16 May 2020 3:50:38 PM
விடாதுபெய்த அடைமழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டதால் ஒரு வழி போக்குவரத்து... ஹற்றன்-நோட்டன் பிரிட்ஜ் பிரதான வீதியில் டிக்கோயா, வனராஜா சமர்வில் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த மண்சரிவு இன்று (சனிக்கிழமை) அதிகாலை ஏற்பட்ட நிலையில் அவ்வீதியூடாக ஒருவழிப் போக்குவரத்தே இடம்பெற்று வருகின்றது.
குறித்த பகுதியில் நேற்றுமாலை முதல் விடாதுபெய்த அடைமழை காரணமாகவே மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஏர் கனடா விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த ஆண்டு பறந்த திறனில் சுமார் ஐந்து சதவீதத்தில் தற்போது பறந்து வருகின்றது. அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால், இந்த ஆண்டின் பிற்பகுதியில் 25 சதவீதம் வரை உயர முடியும்.
தொற்றுநோய் திட்டமிடப்பட்ட விமானங்களை 95 சதவீதம் குறைக்க கட்டாயப்படுத்தியுள்ளது. சாதாரண போக்குவரத்து எப்போது வேண்டுமானாலும் திரும்பும் என்று எதிர்பார்க்கவில்லை
எனவே, முன்னறிவிப்புகளுடன் ஒத்துப்போகும் எங்கள் நடவடிக்கையை கணிசமாகக் குறைக்க இன்று நாங்கள் மிகவும் கடினமான முடிவை எடுத்தோம், இது வருந்தத்தக்க வகையில் எங்கள் பணியாளர்களை 50 முதல் 60 சதவீதம் குறைப்பதாகும்’ என தெரிவித்துள்ளது.
எனவே, போக்குவரத்துக்காக இவ்வீதியை பயன்படுத்தும் சாரதிகள் விழிப்பாகவே இருக்க வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இராணுவம், பொலிஸார் மற்றும் இதர தரப்புகள் இணைந்து வீதியில் சரிந்துள்ள மண், மரம் ஆகியவற்றை அகற்றி பாதையை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளை, தொடர்மழையால் மலையகத்திலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் அதிகரித்து வருகின்றது.