Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா பரவலை தொடர்ந்து தோட்டத்தில் தனிமைப்படுத்தி கொண்ட ராணுவ வீரர்

கொரோனா பரவலை தொடர்ந்து தோட்டத்தில் தனிமைப்படுத்தி கொண்ட ராணுவ வீரர்

By: Karunakaran Fri, 10 July 2020 10:53:31 AM

கொரோனா பரவலை தொடர்ந்து தோட்டத்தில் தனிமைப்படுத்தி கொண்ட ராணுவ வீரர்

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது அங்கு கொரோனா பாதித்தவர்கள் ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடும் சம்பவங்களும், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள் வீட்டு தனிமையில் இருந்து வெளியே சுற்றி திரிவதும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கதக் மாவட்டத்தை சேர்ந்த ஒரு ராணுவ வீரர், சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் தன்னை தானே தனிமைப்படுத்தியுள்ளார். கதக் மாவட்டம் இந்தூரா பென்டூரா கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் கைஹர் என்பவர் ராணுவத்தில் 14 ஆண்டுகளாக 39-வது பட்டாலியன் பிரிவில் பணியாற்றி வந்தார்.

soldier,corona isolate,garden,corona virus ,ராணுவ வீரர், கொரோனா தனிமை, தோட்டம், கொரோனா வைரஸ்

சமீபத்தில் அருணாச்சல பிரதேசத்தில் இந்திய-சீனா எல்லையான லடாக்கில் பணியாற்றிய அவர், கடந்த 2-ந்தேதி சொந்த ஊருக்கு திரும்பினார். தற்போது கதக் மாவட்டத்தில் கொரோனா அதிகமாக பரவி வருகிறது. இதனால் ராணுவ வீரரான பிரகாஷ் கைஹர் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

தனது தோட்டத்தில் டிராக்டரின் பின் தொட்டியை கூடாரமாக்கி, அதில் வசித்து வருகிறார். லடாக்கில் வேலை பார்த்து திரும்பிய ராணுவ வீரர் பிரகாஷ் கைஹருக்கு சுகாதாரத் துறையினர் கொரோனா பரிசோதனை நடத்தியதில் கொரோனா பாதிப்பு இருப்பதாக எந்த அறிகுறியும் இல்லை. கொரோனா பரவி வரும் நிலையில் தன்னால் குடும்பத்தினரும், கிராம மக்களும் பாதித்து விடக் கூடாது என்ற எண்ணத்தில் தோட்டத்திலேயே தனிமையில் தங்கயுள்ளார்.

Tags :
|