Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆளில்லா விமானத்தை குறிவைத்து ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு

ஆளில்லா விமானத்தை குறிவைத்து ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு

By: Nagaraj Fri, 10 Feb 2023 11:48:08 PM

ஆளில்லா விமானத்தை குறிவைத்து ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு

சண்டிகர்: அதியா எல்லை சோதனைச் சாவடி அருகே ஆளில்லா விமானம் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, ஆளில்லா விமானத்தை குறிவைத்து ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது நள்ளிரவில் அதியா எல்லை சோதனைச் சாவடி அருகே ஆளில்லா விமானம் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, ஆளில்லா விமானத்தை குறிவைத்து ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதைத் தொடர்ந்து, ஆளில்லா விமானம் பாகிஸ்தான் எல்லைக்குத் திரும்பியது.

drone,gun fire,soldiers, ,ஆளில்லா விமானம், துப்பாக்கி சூடு, ராணுவ வீரர்கள்

இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஆளில்லா விமானம் விழுந்துள்ளதா என ராணுவ வீரர்கள் சோதனை நடத்தி வருகின்றனர் .

சமீப நாட்களாக பாகிஸ்தானில் இருந்து இதுபோன்று ஆள் இல்லா விமானங்கள் வருவது அதிகரித்துள்ள நிலையில் இது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது .

Tags :
|