- வீடு›
- செய்திகள்›
- அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை சில முக்கிய அறிவுறுத்தல்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை சில முக்கிய அறிவுறுத்தல்
By: vaithegi Fri, 06 Oct 2023 2:35:07 PM
சென்னை: கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கை ... தமிழகத்தில் காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு வழக்கம் போல வகுப்புகள் நடைபெற்று கொண்டு வருகிறது. இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பிவுள்ளது.இதையடுத்து அதில் பள்ளி வளாகம் மற்றும் விளையாட்டு மைதானத்தை எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் டெங்கு போன்ற காய்ச்சல்கள் அதிக அளவில் பரவுவதால் மேற்கூரைகளில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்ற வேண்டும். பள்ளி கட்டடத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.
அத்துடன் பள்ளிகளில் மின் சாதனங்களை மாணவர்களை கொண்டு இயக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அடுத்தாக பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை மற்றும் மதிய உணவு முற்றிலும் சுத்தமாக செய்யப்பட்டு வழங்கப்பட வேண்டும்.
மாணவர்கள் போதைப் பொருட்களால் அடிமையாகுவது தவிர்க்க உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.