நாளை மதுரையில் சில போக்குவரத்து மாற்றம்
By: vaithegi Sat, 29 Oct 2022 9:01:42 PM
மதுரை: போக்குவரத்து மாற்றம் ...... இந்தியாவின் விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களில் ஒருவரான பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115-வது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவானது நாளை கொண்டாடப்பட உள்ளது.
ராமநாதபுர மாவட்டத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு நினைவிடம் இருப்பதால் ஏராளமானோர் வருகை புரிவார்கள்.
அதனால் இங்குள்ள மதுக்கடைகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு கொண்டு வருகிறது. மேலும் இங்கு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு இந்த பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
எனவே அதன்படி நாளை காலை 6 மணி முதல் இரவு 10.30 மணி வரை கோரிபாளையம் தேவர் சிலை நோக்கி லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல தடை என்று போக்குவரத்து போலீசார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனை அடுத்து இந்த விழாவில் கலந்து கொள்ளும் வாகனங்களை தவிர்த்து மற்ற வாகனங்கள் சுற்றுச்சாலை வழியாக செல்ல வேண்டும் எனவும் அறிவித்துள்ளார்.