Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சோனியா மற்றும் பிரியங்கா காந்தி நாளை (செவ்வாய்க்கிழமை) கர்நாடகா வருகை

சோனியா மற்றும் பிரியங்கா காந்தி நாளை (செவ்வாய்க்கிழமை) கர்நாடகா வருகை

By: vaithegi Mon, 03 Oct 2022 08:59:48 AM

சோனியா மற்றும் பிரியங்கா காந்தி நாளை (செவ்வாய்க்கிழமை) கர்நாடகா வருகை

மைசூரு: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி. இவர் பாதயாத்திரையை கடந்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். தமிழகத்தை தொடர்ந்து கேரளாவில் 19 நாட்கள் பாதயாத்திரை நடைபெற்றது. ராகுல்காந்தியின் பாதயாத்திரை கடந்த 30-ந் தேதி கர்நாடகத்துக்குள் நுழைந்தது.

சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் ராகுல்காந்திக்கு காங்கிரசார் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். கா்நாடகத்தில் 2 நாட்கள் பாதயாத்திரையை முடித்த ராகுல்காந்தி நேற்று முன்தினம் இரவு மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா தாண்டவபுரா கிராமத்தில் தங்கினார்.

karnataka,sonia,priyanka gandhi ,கர்நாடகா , சோனியா ,பிரியங்கா காந்தி

இதையடுத்து நேற்று காலையில் ராகுல்காந்தி, காந்தி ஜெயந்தியையொட்டி நஞ்சன்கூடு தாலுகா பதனவாலு கிராமத்தில் உள்ள காதி கிரமோத்யோக் மையத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இன்று (திங்கட்கிழமை) காலை மைசூருவில் இருந்து பாதயாத்திரையை தொடங்கி ஸ்ரீரங்கப்பட்டணா வழியாக மண்டியாவுக்கு செல்கிறார்.

இதனை அடுத்து இப்பாதயாத்திரையில் ஒரு நாள் மட்டும் கலந்துகொள்ள சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் முடிவு செய்துள்ளனர். எனவே அதன்படி சோனியா மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் நாளை (செவ்வாய்க்கிழமை) கர்நாடகா வருகிறார்கள். அவர்கள் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மைசூருவுக்கு வரவுள்ளனர். வருகிற 6-ந் தேதி அவர்கள் ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. சிறிது தூரம் அவர்கள் பாதயாத்திரையில் பங்கேற்று நடப்பார்கள் என சொல்லப்படுகிறது.

Tags :
|