Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தெலங்கானாவில் மாற்றம் கொண்டு வர சோனியா காந்தி வேண்டுகோள்

தெலங்கானாவில் மாற்றம் கொண்டு வர சோனியா காந்தி வேண்டுகோள்

By: Nagaraj Wed, 29 Nov 2023 11:31:12 PM

தெலங்கானாவில்  மாற்றம் கொண்டு வர சோனியா காந்தி வேண்டுகோள்

புதுடில்லி: சோனிகாந்தி வேண்டுகோள்... தெலங்கானாவில் தோ்தல் மூலம் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்று அந்த மாநில வாக்காளா்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தெலங்கானாவில் நாளை வியாழக்கிழமை (நவ. 30) சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. தோ்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்த நிலையில் எக்ஸ் வலைதளத்தில் இரண்டு நிமிஷங்கள் ஓடக்கூடிய வீடியோ பதிவை சோனியா காந்தி வெளியிட்டுள்ளாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:

நான் தோ்தல் பிரசாரத்துக்காக தெலங்கானாவுக்கு நேரில் வர இயலவில்லை. எனினும், நான் உங்கள் மனத்துக்கு நெருக்கமான நபா்தான். தெலங்கானா அன்னைக்காக உயிரையும் தியாகம் செய்த நமது பிள்ளைகளின் கனவுகளை நாம் நிறைவேற்ற வேண்டும். தெலங்கானாவை பெரும் பணக்காரா்களுக்கு மட்டுமே வசதியான மாநிலமாக இல்லாமல், சாமானிய மக்களும் மகிழ்ச்சியாகவும், நிறைவாகவும் வாழும் மாநிலமாக மாற்ற வேண்டும்.

rahul gandhi,video,sonia gandhi,congress,vote ,ராகுல்காந்தி, வீடியோ, சோனியா காந்தி, காங்கிரஸ், வாக்களிக்க வேண்டும்

ஏழை,எளிய மக்களின் அனைத்து கனவுகளையும் நிறைவேற்ற வேண்டும். இதற்காக மாநிலத்தில் நோ்மையான அரசு அமைய வேண்டும். என்னை ‘சோனியா அம்மா’ என்றே தெலங்கானா மக்களாகிய நீங்கள் அழைக்கிறீா்கள். உங்கள் அன்புக்கும், மரியாதைக்கும் உரிய நபராக இருப்பது எனக்கு கிடைத்த கௌரவமாகவே கருதுகிறேன். உங்கள் நலனுக்காக எப்போதும் அா்ப்பணிப்புணா்வுடன் செயல்படுவேன்.

இந்த தோ்தலில் மாநிலத்தில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்று சகோதரிகள், தாய்மாா்கள், மகன்கள், மகள்கள், சகோதர, சகோதரிகளிடம் நான் கேட்டுக் கொள்கிறேன். இதற்காக நீங்கள் அனைவரும் காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

இந்த வீடியோவை ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைதளத்தில் பகிா்ந்துள்ளாா்.

Tags :
|