Advertisement

காங்கிரஸ் தலைவராக தொடர விருப்பம் இல்லை - சோனியா காந்தி

By: Karunakaran Mon, 24 Aug 2020 4:27:37 PM

காங்கிரஸ் தலைவராக தொடர விருப்பம் இல்லை - சோனியா காந்தி

காங்கிரசுக்கு நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் தலைவராக வர வேண்டும் என புத்தகம் ஒன்றுக்கு பிரியங்கா காந்தி அளித்த நேர்காணல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் அக்கட்சிக்குள் எழுந்து வந்துள்ளது. இதே கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரசின் மூத்த தலைவர்கள் 23 பேர் சோனியாகாந்திக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

அதில், பாஜக மற்றும் பிரதமர் மோடியின் எழுச்சியை சுட்டிக்காட்டியுள்ளதாகவும், காங்கிரசின் ஆதரவுத்தளம் மற்றும் இளைஞர்களின் நம்பிக்கை ஆகியவை குறைந்து வருவது குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த குலாம் நபி ஆசாத், சசி தரூர், கபில் சிபல், மனீஷ் திவாரி உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள், முன்னாள் முதலமைச்சர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட 23 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

sonia gandhi,congress president,congress party,rahul gandhi ,சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர், காங்கிரஸ் கட்சி, ராகுல் காந்தி

தற்போது இந்த ஆண்டு நவம்பர் மாதம் பீகார் மாநிலத்திலும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற உள்ளது. இதனால், காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைவர் வேண்டும் என்ற கோரிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

இந்நிலையில் இன்று சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டம் டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் நடைபெறுகிறது. இதற்கு முன் மூத்த தலைவர்களின் கடிதத்திற்கு பதிலளித்துள்ள சோனியா காந்தி, இடைக்கால தலைவர் பொறுப்பில் இருந்து விலக தயார். தலைவராக தொடர விருப்பம் இல்லை என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags :