ஸ்ரீநகர் ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்த சோனியா காந்தி
By: Nagaraj Sun, 27 Aug 2023 8:41:41 PM
ஸ்ரீநகர்: ஏரியில் படகு சவாரி... காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி, ஸ்ரீநகரில் உள்ள நிகீன் ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தார்.
ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா சென்றுள்ள அவர், ஒருவாரகாலம் லடாக்கில் பயணித்து வந்துள்ள ராகுல்காந்தியை இன்று சந்திக்க உள்ளார்.
ஸ்ரீநகர் விமான நிலையத்துக்கு வந்த சோனியா காந்தியை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வரவேற்றனர். பின்னர் அவர் படகு சவாரி செய்தார்.
இதே போல் ராகுல் காந்தியும் கார்கிலில் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு லடாக் பயணத்தை நிறைவு செய்தார். நேற்று மாலை ஸ்ரீநகர் வந்த ராகுல் காந்தியும் ஏரியில் உள்ள படகுவீட்டில் தங்கினார். இன்று அவர் சோனியாவை சந்திக்க உள்ளார்.
இதனிடையே பிரியங்கா காந்தியும் அவர் கணவர் ராபர்ட் வாத்ராவும் இன்று குடும்பத்தினருடன் இணைய உள்ளனர். அனைவரும் இன்று குல்மார்க் செல்ல திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.