Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சோனியா காந்தி குடும்ப அறக்கட்டளைகளின் சட்ட விதிமீறல்களை விசாரிக்க மத்திய அரசு குழு நியமனம்

சோனியா காந்தி குடும்ப அறக்கட்டளைகளின் சட்ட விதிமீறல்களை விசாரிக்க மத்திய அரசு குழு நியமனம்

By: Karunakaran Thu, 09 July 2020 1:06:16 PM

சோனியா காந்தி குடும்ப அறக்கட்டளைகளின் சட்ட விதிமீறல்களை விசாரிக்க மத்திய அரசு குழு நியமனம்

அண்மையில் ராஜீவ் காந்தி பவுண்டேசனுக்கு எதிராக பாஜக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டன. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ராஜீவ் காந்தி பவுண்டேசனுக்கு நன்கொடை அளிக்கப்பட்டதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறினார். மேலும் இந்த பவுண்டேசனுக்கு சீன தூதரகத்தில் இருந்து நன்கொடை பெறப்பட்டதாக மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் குற்றம் சாட்டினார்.

கடந்த 1991-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ராஜீவ் காந்தி பவுண்டேசனுக்கு தலைவராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளார். மேலும் இதில் மன்மோகன்சிங், ராகுல் காந்தி, பிரியங்கா, ப.சிதம்பரம், மான்டேக்சிங் அலுவாலியா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். 2002-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ராஜீவ் காந்தி சேரிட்டபிள் டிரஸ்ட் என்ற அறக்கட்டளையின் தலைவராக சோனியா காந்தியும், உறுப்பினர்களாக ராகுல் காந்தி, அசோக் கங்குலி, பன்சி மேத்தா ஆகியோரும் உள்ளனர்.

sonia gandhi,trust,investigate,infringements of the law ,சோனியா காந்தி, அறக்கட்டளை, விசாரணை, சட்ட மீறல்கள்

மேலும் இவற்றுடன் இந்திரா காந்தி மெமோரியல் டிரஸ்ட் என்ற அறக்கட்டளையும் சோனியா காந்தி குடும்பத்துக்கு சொந்தமாக உள்ளது. தற்போது, இந்த அறக்கட்டளைகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால், இதுகுறித்து விசாரணையை ஒருங்கிணைக்க அமைச்சகங்களுக்கு இடையிலான குழு ஒன்றை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.

இந்த குழு, சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டம், வருமான வரி சட்டம், வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டம் ஆகிய சட்டங்களை மீறியதாக கூறப்படும் புகார்கள் குறித்து விசாரணை நடத்தும். மேலும், அமலாக்கப்பிரிவு சிறப்பு இயக்குனர் ஒருவர் தலைமையில் விசாரணை குழு செயல்படும் என மத்திய உள்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Tags :
|