- வீடு›
- செய்திகள்›
- தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இந்த நாள்களில் மழைக்கு வாய்ப்பு
தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இந்த நாள்களில் மழைக்கு வாய்ப்பு
By: vaithegi Fri, 24 Feb 2023 3:20:42 PM
சென்னை: தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்க இருக்கும் நிலையில் பெரும்பாலான மாவட்டங்களில் பகல் நேரங்களில் வறண்ட வானிலையும் நிலவி கொண்டு வருகிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் வருகிற பிப்ரவரி 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் 27-ம் தேதி மற்றும் 28-ம் தேதி ஆகிய 2 நாட்கள் தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் குறைந்தபட்சமாக 22 டிகிரி முதல் அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ் வரை வெப்பறிலை இருக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் அறிவிக்கப்படவில்லை என வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.