Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தென் மாவட்டங்கள் ,டெல்டா மாவட்டங்களில் வருகிற 11 முதல் 13ம் தேதி வரை மழை பெய்யக்கூடும்

தென் மாவட்டங்கள் ,டெல்டா மாவட்டங்களில் வருகிற 11 முதல் 13ம் தேதி வரை மழை பெய்யக்கூடும்

By: vaithegi Thu, 09 Mar 2023 3:30:05 PM

தென் மாவட்டங்கள் ,டெல்டா மாவட்டங்களில்  வருகிற 11 முதல் 13ம் தேதி வரை மழை பெய்யக்கூடும்

சென்னை: வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் எனதகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 11.03.2023 முதல் 13.03.2023 வரை தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

rainy,south district,delta districts ,மழை , தென் மாவட்டங்க ,டெல்டா மாவட்டங்கள்

இதனை அடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பதிவான மழை அளவு ஏதுமில்லை. இதேபோன்று மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.

Tags :
|