Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்டும் ... தெற்கு ரெயில்வே தெரிவிப்பு

ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்டும் ... தெற்கு ரெயில்வே தெரிவிப்பு

By: vaithegi Thu, 02 Feb 2023 10:26:00 AM

ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்டும்   ...    தெற்கு ரெயில்வே தெரிவிப்பு

சென்னை: ரெயில் வழித்தடத்தில் ரெயில்களின் வேகத்தை அதிகரித்து, பயண நேரத்தை குறைக்க தெற்கு ரெயில்வே நிர்வாகம் தீவிர முயற்சி எடுத்து கொண்டு வருகிறது. எனவே இதற்காக, தண்டவாளம் மற்றும் சிக்னல் முறையை மேம்படுத்துதல், வேகக் கட்டுப்பாடுகளை அகற்றுதல், பாலங்களை சீரமைத்தல், மேம்பாலம் மற்றும் சுரங்கம் கட்டுமானப் பணிகளை செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் உள்ள முக்கிய ரயில்களின் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் பயண நேரத்தை குறைக்க ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பயணிகள் மத்தியில் இருந்து கோரிக்கை விடப்பட்டு வந்தது. இந்த நிலையில் இக்கோரிக்கையை ஏற்றுக் கொண்டதற்கு ரயில்வே சென்னை சென்ட்ரல்-கூடூர், சென்னை சென்ட்ரல்-அத்திப்பட்டு, சென்னை-அரக்கோணம்-ரேணிகுண்டா ஆகிய வழித்தடங்களில் சமீபத்தில் அடுத்தடுத்து சோதனை ஓட்டம் நடைபெற்றது.

southern railway,trains ,  தெற்கு ரெயில்வே,ரயில்கள்


இதையடுத்து அப்போது, இந்த வழித்தடங்களில் மணிக்கு அதிகபட்சம் 145 கி.மீ. வேகம் வரை ரெயில் இன்ஜினை இயக்கி சோதனை நடத்தப்பட்டது. இந்நிதி ஆண்டில் சென்னை-கூடூர், சென்னை-ரேணிகுண்டா ஆகிய 2 வழித்தடங்களில் 130 கி.மீ. வேகம் வரை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தஞ்சாவூர்-பொன்மலை, விருத்தாசலம்-சேலம், விழுப்புரம்-புதுச்சேரி, மதுரை-திருநெல்வேலி, விழுப்புரம்-காட்பாடி, அரக்கோணம்-செங்கல்பட்டு, திருநெல்வேலி-தென்காசி, திருநெல்வேலி-திருச்செந்தூர், தஞ்சாவூர்-நாகர்கோவில் ஆகிய 9 வழித்தடங்களில் 110 கி.மீ. வரை வேகத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையிலிருந்து ரேணிகுண்டா மற்றும் அரக்கோணத்திலிருந்து ஜோலார்பேட்டை வரை இயக்கப்படும் ரெயில்களின் வேகத்தை 110 கிலோமீட்டரில் இருந்து 130 கிலோமீட்டராக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை, பெங்களூர், மும்பை உள்ளிட்ட வழித்தடங்களில் செல்லும் ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க திட்ட அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஒப்புதல் வழங்கப்பட்ட பிறகு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் முதல் சென்னை-பெங்களூரு வழித்தடத்தில் ரெயில்கள் 160 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் இதனால் பயண நேரம் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :