Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆயுத பூஜை.. சிறப்பு ரயில்களை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு

ஆயுத பூஜை.. சிறப்பு ரயில்களை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு

By: vaithegi Fri, 20 Oct 2023 09:40:35 AM

ஆயுத பூஜை..  சிறப்பு ரயில்களை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு


சென்னை: தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுயிருப்பதாவது: ஆயுத பூஜையை முன்னிட்டு ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த சென்னை எழும்பூர்-நெல்லை, நெல்லை-தாம்பரம் மற்றும் சென்னை சென்டிரல் - மங்களூர் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படவுள்ளது.

இதையடுத்து அதன்படி, இன்று இரவு 10.40 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து சிறப்பு ரெயில்(வண்டி எண்.06043) புறப்பட்டு நாளை (21-ந்தேதி) காலை 9.45 மணிக்கு நெல்லை சென்றடையும்.

southern railway,ayudha puja,special train ,தெற்கு ரயில்வே ,ஆயுத பூஜை,சிறப்பு ரயில்

அதைத்தொடர்ந்து மறுமார்க்கமாக வரும் 24-ந்தேதி நெல்லையிலிருந்து மாலை 5.35 மணிக்கு சிறப்பு ரெயில்(06044) புறப்பட்டு அடுத்தநாள் காலை 4.20 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

இதேபோன்று, சென்னை சென்டிரலில் இருந்து மங்களூருக்கு இன்று இரவு 11.45 மணிக்கு சிறப்பு ரெயில்(06047) புறப்பட்டு நாளை மாலை 4 மணிக்கு மங்களூர் சென்றடையும். மறுமார்க்கமாக மங்களூரிலிருந்து நாளை இரவு 7.30 மணிக்கு சிறப்பு ரெயில் (06048) புறப்பட்டு அடுத்தநாள் காலை 11.20 மணிக்கு சென்டிரல் ரெயில் நிலையம் வந்தடையும்.

Tags :