Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை சிறப்பு ரயில் இயக்கம் .. தெற்கு ரயில்வே தெரிவிப்பு

நாளை சிறப்பு ரயில் இயக்கம் .. தெற்கு ரயில்வே தெரிவிப்பு

By: vaithegi Sat, 25 Mar 2023 4:37:12 PM

நாளை சிறப்பு ரயில் இயக்கம்   ..  தெற்கு ரயில்வே தெரிவிப்பு

சென்னை: நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொதுமக்கள் அதிகம் பயணம் மேற்கொள்வார்கள். அதனால் பயணிகளுக்கு வசதியாக சென்னைக்கு செல்ல திருநெல்வேலி – தாம்பரம் என்ற சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு ரயில் சாத்தூர், கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தஞ்சாவூர், திருச்சி, மயிலாடுதுறை, கும்பகோணம், சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

southern railway,special train ,தெற்கு ரயில்வே , சிறப்பு ரயில்

இதனையடுத்து, இந்த சிறப்பு ரயில் திருநெல்வேலி – தாம்பரம் சிறப்பு ரயில் நாளை மாலை 6.00 மணிக்கு புறப்பட்டு இரவு 08.35 மணிக்கு மதுரைக்கு வந்தடைகிறது. இதையடுத்து, மதுரையில் இருந்து 8.40 மணிக்கு புறப்பட்டு நாளை மறுநாள் காலை 6.15 மணிக்கு தாம்பரம் சென்று சேரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் ஆனது மொத்தம் 16 பெட்டிகளை கொண்டுள்ளது. மேலும் இதில் மாற்று திறனாளிகளுக்கான 2ம் வகுப்பு பொதுப்பிரிவில் 2 பெட்டிகளும், அத்துடன் குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கையுடன் கூடிய பிரிவில் 2 பெட்டிகள், 2-ம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட 2 பெட்டிகளும் இடம்பெற்றுள்ளது. இதே போல் 2-ம் வகுப்பு பொதுப்பிரிவில் 4 பெட்டிகளும் இணைக்கப்பட்டிருக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :