Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தீவிரமடையும் தென்மேற்குப் பருவமழை..மழை நீடிக்கும் வானிலை மையம் அறிவிப்பு..

தீவிரமடையும் தென்மேற்குப் பருவமழை..மழை நீடிக்கும் வானிலை மையம் அறிவிப்பு..

By: Monisha Wed, 13 July 2022 8:21:54 PM

தீவிரமடையும் தென்மேற்குப் பருவமழை..மழை நீடிக்கும் வானிலை மையம் அறிவிப்பு..

தமிழ்நாடு: தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இன்று முதல் இரண்டு நாட்களுக்கு நீலகிரி, கோவையில் மிக கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.தென்மேற்குப் பருவமழை கடந்த மே மாதம் இறுதியில் தொடங்கியது.

ஜூன் மாதத்தில் ஓரளவு மழை பெய்தாலும் ஜூலை மாதம் தொடங்கியதில் இருந்தே மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் கனமழை நீடிக்கிறது.

southwest,monsoon,rain,heavy ,தென்மேற்கு, பருவமழை,கனமழை,வானிலை,

வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றைய தினம் வட தமிழகம், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரைக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

Tags :
|